Saturday, 3 April 2021

இந்த கிழமையில் பிறந்தவர்கள், இப்படித்தான் இருப்பார்கள்.!!

 ஞாயிறு கிழமை:
 பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். உடலில் நோய் தாக்கம் 
பெரிதாக ஏற்படாது. துணிச்சலாக இருப்பார்கள். உரத்த குரலில் 
சத்தமாக பேசுவார்கள். தான் சொல்வது தான் சரி என்று 
சாதிப்பார்கள். வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பிறருக்கு 
உதவிகள் செய்து துன்ப படுவார்கள். மற்றவர்களை வேலை வாங்கும் குணம் இருக்கும். நிர்வாக திறமை கொண்டவர்கள். 

திங்கள் கிழமை:
 எப்போதும் குழம்பிய மன நிலையில் இருப்பார்கள். எதையும் 
ஒரு பய உணர்வோடு அணுகுவார்கள். சந்தேக குணம் 
இருக்கும். இரக்க குணம் கொண்டவர்கள். வயதானாலும் 
இளமையோடு இருப்பார்கள். தலைவலி, சளி சமந்தப்பட்ட 
நோய்கள் அடிக்கடி வரும். 

செவ்வாய் கிழமை:

 உடல் உஷ்ணம் இருக்கும். வெளிப்பார்வைக்கு 
அமைதியானவர்களாக தெரிவார்கள். ஆனால் 
கடுங்கோபக்காரரகள். இவர்களுக்கு சும்மா இருக்க பிடிக்காது. 
ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். கொடுத்த 
வாக்கை காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள். செலவுகள் 
செய்வதிலும் பொய்கள் பேசுவதிலும் கெட்டிக்காரர்கள். 
வறுமையில் வாழ்ந்தாலும் வெளியே காட்டிகொள்ள 
மாட்டார்கள். 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும்.

புதன் கிழமை:
அழகும் அறிவும் நிறைந்தவர்கள். விடா முயற்சி 
கொண்டவர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். 
சுறுசுறுப்பானவர்கள். புதுமையை விரும்புவார்கள். 
அடுத்தவர்களுக்கு வழி காட்டுவதில் வல்லவர்கள். தொழில் 
ஆர்வம் நிறைந்தவர்கள். அரட்டை அடிப்பதில் ஆர்வம் 
இருக்கும். எளிதில் காதல் வசப்படுபவர்கள். உண்மையை 
மறைக்க தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். 


வியாழன்: 
ஒழுக்கம் நிறைந்தவர்கள். நீதி நேர்மை என வாழ்பவர்கள். 
குடும்பத்தை கட்டிக்காப்பார்கள். சிறு வயதிலேயே திருமணம் 
ஆகிவிடும். ஆண் குழநதைகள் அதிகம் இருக்கும். தனியா 
நின்று போராடுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற 
போராடுவார்கள். வன்முறை பிடிக்காது. கடவுள் பக்தி 
உடையவர்கள். குடும்பத்தை அனுசரித்து நடப்பார்கள். சமூக  சேவையில் ஈடுபாடு கொண்டவர்கள். 

வெள்ளி: 
தாரளமாக உதவிகள் செய்வார்கள். கெட்ட பழக்கங்கள் 
எளிதில் தொற்றிக்கொள்ளும். பழிவாங்கும் குணம் 
கொண்டவர்கள். வசதியாக வாழ, தவறுகள் செய்யவும் தயங்க 
மாட்டார்கள். கருப்பா இருந்தாலும் கலையாக இருப்பார்கள். 
தன்னையும் தன் இருப்பிடத்தையும் அலங்கரித்துகொள்ள அதிக 
ஆர்வம் காட்டுவார்கள். இந்த பூனையும் பால் குடிக்குமா என 
இருப்பார்கள். ஆனால் சண்டை போடுவதில் வல்லவர்கள். ஊர் சுற்றும் குணம் இருக்கும்.

சனி: 

நேர்மையாக வாழ நினைப்பவர்கள். வாய்ப்புக்காக காத்து 
இருப்பார்கள். எதிலும் நிரந்திர ஈடுபாடு இருக்காது. 
சந்தோசமான வாழ்க்கை அமைந்தாலும் எதையோ 
பறிகொடுத்தது போல தான் இருப்பார்கள். இவர்கள் யாரோடு 
சேருகிறார்களோ அவர்களது குணத்தை பெற்றுவிடுவார்கள். 
சோம்பேறித்தனம் மந்த குணம் இருக்கும். ஆனால் 
புத்திசாலிகள். இவர்களுக்கு முறைப்படியான திருமணம் 
நடைபெறுவது சற்று கடினம். கடவுள் பக்தி உடையவர்கள். 

Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....


Facebook மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....

No comments:

Post a Comment