( 14.03.2021 முதல் 13.04.2021 வரை )
மார்ச் 14 அன்று குரு - புதன் கிரக யுத்தம் ஏற்படுகிறது. இயற்கைச் சீற்றம் ஏற்படும். மார்ச் 28 ல் செவ்வாய் ராகு இணைகிறார்கள். ஏப்ரல் 6-ல் குரு கும்பப் பிரவேசம் செய்கிறார். மார்ச் 14-ல் செவ்வாய் மிதுன ராசிக்குச் செல்கிறார். மக்கள் நலதிட்டங்கள் எவ்வித இடையூறுகளுமின்றி நிறைவேற்றப்படும்.
கேதுவின் சஞ்சாரத்தால் குண்டு வெடிப்பு. நிலச் சரிவு. ஆர்பாட்டம். வன்முறை, தேவையற்ற பருவநிலை. வெயில் அதிகம். பிரபலங்களின் இழப்பு (குறிப்பாக பெண்ணொருவரின் இழப்பும்) ஏற்படக்கூடும். மாத இறுதி நாளன்று (14.04.2020) செவ்வாய் மிதுன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். செவ்வாயும் சனியும் சஷ்டாஷ்டகமாக இருப்பர். இது துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தும்
மழை :
மார்ச் : 14. 15. 18. 23. 24. 28. 30. பேரலைகள் தோன்றும்
ஏப்ரல் : 2.6.7. 11, 14.
- பராசரம் பாலசுப்பிரமணியம் ( பஞ்சாங்க கணிதர் )
நட்சத்திர பலன்கள் :
ரோகிணி உத்திரம் பூராடம்
உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம் . உடல் நலத்தில் கவனம் தேவை.
மிருகசீரிஷம் அஸ்தம் உத்திராடம்
லாபகரமான செயல்கள் நடைபெறும். பண வரவு இருக்கும்.
திருவாதிரை சித்திரை திருவோணம்
அதிக செலவுகள் ஏற்படும். பண விசயத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் சுவாதி அவிட்டம்
அலைச்சல்கள் மற்றும் நேரத்திற்கு சாப்பிட இயலாமை இருக்கும்.
பூசம் விசாகம் சதயம் ரேவதி
சந்தோஷமான நிகழ்வுகள் , வாய்க்கு ருசியான விருந்துகள் கிடைக்கும்.
அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி
பொன் பொருள் நகை பண சேர்க்கை உண்டு.
பரணி மகம் கேட்டை உத்திரட்டாதி
சண்டைகள் கலகங்கள் மனஸ்தாபங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
கார்த்திகை பூரம் மூலம்
காரிய தடைகள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும். ஏதுனும் துக்க செய்திகள் கேட்க நேரிடலாம்.
Whatsapp மூலம் பதிவுகளை பெறுவதற்கு.....
No comments:
Post a Comment