Monday, 24 February 2020

கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம்.!!

தற்போது கடன் பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் கடன் வாங்க மாட்டேன் என வாழ்பவர்களும் உண்டு. அவ்வாறு வாழ்பவர்களை விதி கடனில் மூழ்க செய்வதும் உண்டு.

ஒருவருக்கு கடன் பிரச்சனை 2 விதத்தில் இருக்கும்.

சிலருக்கு ஏழரை சனி, சில திசாபுத்தி காலத்தில் வரும். அவ்வாறு வரும் கடன் பிரட்சணைகள் அது முடிந்ததும் சரி ஆகி விடும்.

சிலருக்கு ஜாதக அமைப்பே கடனாளி என்று இருக்கும். அதை ஒன்றும் செய்ய இயலாது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் தன் பெயரில் இல்லாமல் வேறு ஒருவரின் பெயரில் பணத்தை போட்டு வைப்பது நல்லது.

11ம் வீட்டு அதிபதி 6, 8,12ம் இடங்களில் இருந்தால் அதற்கு தரித்திர யோகம் என்று பெயர். ( யோகம் என்றால் அமைப்பு என்றும் அர்த்தம் உண்டு )

இவர்களுக்கு கையில் காசு தங்காது. கடன் வாங்க யோசிக்க மாட்டார்கள். எப்போதும் பண தட்டுப்பாடு இருக்கும்.

கடன் பிரச்சனைக்கு இந்த ஒரு அமைப்பு மட்டும் காரணமல்ல.. இது போல வேறு சில அமைப்புகளும் மாந்தியும் உள்ளன.

பரிகாரம் :
அஷ்ட லட்சுமி வழிபாடு செய்து வர தரித்திர யோகம் நீங்கி செல்வம் பெருகும்.


Whatsapp மூலமாக தினசரி நட்சத்திர பலன்கள், மாத பலன்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிட தகவல்களை உடனடியாக பெற join this group.




No comments:

Post a Comment